jeudi 2 juin 2022
samedi 19 décembre 2020
புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் நன்நீர்த்தேவைக்கான உதவிகள்.
பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் பலவருடமாக செயற்படாமல் கிடந்த மழைநீர் சேகரிக்கும் தொட்டியினை புனர்த்தானம் செய்து தருவதாக பாடசாலைச் சமூகத்திடம் உறுதியளித்திருந்தோம். அந்தவகையில் அவ்வேலைத்திட்டத்தினை பின்வருமாறு செயற்படுத்தமாறு கேட்டிருந்தோம். இதனை பிரதேசசபை உறுப்பினரும் சமூக சேவையாளரும் சூழகம் அமைப்பின் தலைவருமான திரு நாவலன் கருணாகரன் ஊடாக மகாவித்தியாலய அதிபர் திரு கனகரெத்தினம் அவர்களின் ஒப்பிதலுடன் செயற்படுத்தினோம்.
1. மகாவித்தியாலயத்தின் 2 மாடிக்கட்டிடத்தின் கூரை முழுவதற்கும் Balance bord அடித்து தரமான பீலி அமைப்பதென்றும். (அண்ணளவாக 90 மீட்டர் நீளம்)
2. புதிய மகிந்த ஆய்வுக்கூட கூரையினால் வரும் நீரினை அருகில் உள்ள கிணற்றுக்குள் செலுத்துவது. இதனால் கிணற்று நீா் சிறிதளவுகாலம் நன்னீராக நீடிக்கும் என்றும் காலப்போகிகில் நன்நீராக மாறலாம் என்னும் ஊகத்திலும் அதனையும் செயற்படுத்தக் கேட்டிருந்தோம்.
3. ஏற்கனவே உள்ள தண்ணீத்தொட்டியினை புனரமைப்பது.
4. புதிய நீர்த்தாங்கி அமைத்தல்.
இதில் முதல் இரண்டும் 2019 ஆவணி மாதத்தில் ருபா 2,51,000 செலவில் முடிவடைந்தது.
மற்றவை கோவிட் தாக்கத்தினால் நடைபெறவில்லை. தற்போது அதற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளார்கள்.
samedi 11 avril 2020
France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் விடுக்கும் அறிவித்தல்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் பிரான்சில் எமது மக்களிடையே ஏற்படும் உயிர் இழப்புகளுக்கு கூட எம்மால் அஞ்சலி செலுத்தவோ மலர் தூவி மரியாதை செலுத்தவோ முடியாத நிலையை எண்ணி மிகவும் வருந்துகிறோம்.
அந்த வகையில் அண்மையில் பிரான்ஸில் காலமான அமரர் சதாசிவம் சிவகாமிப்பிள்ளை, அமரர் கந்தப்பு சோமசுந்தரம், அமரர் நவசிவாயம் கனகம்மா, அமரர் பாலச்சந்திரன் கமலாம்பிகை ஆகியோருக்கும் மற்றும் இதில் யாரையாவது குறிப்பிட தவறி இருந்தால் அத்தனை அமரர்களுக்கும் எமது ஆழ்ந்த அஞ்சலிகளை செலுத்தும் அதேநேரத்தில் அவர்களது ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்தனை செய்கின்றோம்.
இது போன்ற தனிமைப்படுத்தப்பட்ட பயங்கர சூழ்நிலையில் அவர்களது குடும்ப உறுப்பினர்களது மனத்தைரியத்துக்கும் இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம். அவர்களது துயரத்தில் பங்கெடுக்க முடியாததையிட்டு எமது ஆழ்ந்த கவலையையும் மன்னிப்பையும் இத்தால் தெரியப்படுத்துகின்றோம்.
நன்றி.
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பிரான்ஸ். 10/04/2020
lundi 6 avril 2020
மனிதநேயப்பணியை வாழ்த்துகின்றோம்
இவர்களின் இம்மனித நேயப்பணியானது சரியான நேரத்தில் அங்கு வாழ்வியல் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு கிடைக்கச் செய்ததனையிட்டு அவர்களுக்கு எமது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன் அவர்களின் அன்புக்குரியவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.
நன்றி
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்.
samedi 28 mars 2020
அறிவுத்திறன் போட்டி 2020 அறிவித்தல்
நன்றி.
lundi 24 février 2020
அறிவுத்திறன் போட்டி 2020
விண்ணப்பமுடிவு முடிவு திகதி 15/04/2020.
விண்ணப்பபடிவம் பெற கீழ்வரும் விண்ணப்பப்படிவத்தில் கிளிக் பண்ணவும்
திருக்குறள் போட்டிக்கான தலைப்புக்கள்கீழ்வரும் அதிகாரங்களில் சொடுக்குவதன் மூலம் நீங்கள் உங்கள் குறள்களை பெற்றுக்கொள்ளலாம்
திருக்குறள்(பாலர்பிரிவ) திருக்குறள் (கீழ்ப்பிரிவு)
அதிகாரம் 13 அடக்கவுடமை" அதிகாரம் 78 "படைச்செருக்கு"
அதிகாரம் 14 "ஒழுக்கமுடைமை" அதிகாரம் 79 "நட்பு"