samedi 27 décembre 2014

வெள்ளநிவாரண உதவி மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தினூடாக உதவிகள் செய்யப்பட்டதற்கான படங்கள்
வெள்ளஅனர்த்தங்களை படங்களில் பார்வையிட

samedi 20 décembre 2014

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் உதவியுடன் குழாய்கிணறு வசதிகள்



பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பொருளாளர் திரு லோகேஸ்வரன் அவர்களின் புதல்வர் திரு சந்துரு  அவர்கள் மட்டக்களப்பில் போரினால் பாதிப்படைந்து மீள்குடியேறிய வந்தாறு மூலை மேற்கு கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் வாழும் 35 குடும்பங்களுக்கான 12 குழாக்கிணறு அமைத்துக் கொடுப்பதற்கான நிதியுதவியினை பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினூடாக உதவியதற்கு ஒன்றியம் சார்பில் இதயபூர்வமாகப் பாராட்டுகின்றோம்.மேலும் எமது இளையசமூகத்தினர் இவ்வாறான சமூகமுன்னேற்ற செயற்பாடுகளில் தங்களினால் இயன்ற உதவிகளை செய்து எமது மக்களை முன்னெற்றப்பாதையில் இட்டுச்செல்ல வேண்டும் என அன்பாக வேண்டுகின்றோம்.

dimanche 30 novembre 2014

புங்குடுதீவு மகாவித்தியாலயம் சுற்றுமதில்

எமது ஒன்றியத்தின் உதவியுடன் அமைக்கப்படும் மகாவித்தியதலயச் சுற்றுமதில் அதன் 80 வீத வேலைகள்  முடிவடைந்துள்ளது. தற்போதய மழைகாலநிலையினால் அதன் முன்னேற்றத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது, தற்போது புங்குடுதீவில் தொடர்மழை பெய்து நீர்நிலைகள் நிறைந்துள்ளதாக அறிகின்றோம். மழைக்காலம் தணிந்ததும் தொடர்ந்து வேலைகள் முன்னெடுக்கப் படும் என்பதனை அறியத்தருகின்றோம்.
தற்போதய மதில் படங்கள் கார்த்திகையில் கிடைக்கப்பெற்றவை.










samedi 8 novembre 2014

11 வது தென்னங்கீற்று பிரதமவிருந்தினர் உரை.


பிரதமவிருந்தினராக வடஇலங்கைச் சர்வோதயத்தின் அறங்காவலரும் நான்கு தசாப்தமாக சமூகசேவையில் தன்னை அர்ப்பபணித்து செயற்படுபவருமான செல்வி யமுனாதேவி பொன்னம்பலம் அவர்கள் எமது வருடாந்த தென்னங்கீற்று விழாவில் ஆற்றிய உரை.

உரையினைக் ஒளி ஒலியில் கேட்பதற்கு இங்கே அழுத்தவும்



lundi 27 octobre 2014

vendredi 24 octobre 2014

(செய்திகள்& படங்கள்) புங்குடுதீவு "பாரதி விளையாட்டுக் கழக" விளையாட்டு போட்டி, நேற்றைய இறுதிநாள் நிகழ்வுகள்..!

கடந்த சிலநாட்களாக தொடர்ந்து புங்குடுதீவில் நடைபெற்ற "அனைத்து தீவுப் பகுதிகளுக்குமான" விளையாட்டுப் போட்டியின் நேற்றைய இறுதிநாள் நிகழ்வு காலையில் பெய்த அடைமழை, காலநிலை மாற்றத்துக்கு மத்தியிலும் சிறப்பாக நடைபெற்றது.

புங்குடுதீவு பாரதி விளையாட்டுக் கழகம் நேற்று நடத்திய விளையாட்டு போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வின் போது ஊர்பெரியவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

இதில் பிரதம விருந்தினராக வேலணை பிரதேச சபையின் தவிசாளா் திரு சின்னையா சிவராசா (போல்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக அருட்தந்தை திரு.சின்னத்திரை லியோ ஆர்ம்ஸ்ராங் (புங்குடுதீவு தேவாலயப் பங்குத்தந்தை), பிரம்மஸ்ரீ முரளி சர்மா (பெத்தப்பா சிவன் ஆலயம்), திருமதி.சுலோசனா தனம் (புங்குடுதீவு அபிவிருத்திக்கான மக்கள் ஒன்றிய பொருளாளர்) உட்பட பலரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

(படங்கள்) புங்குடுதீவில் "மீனவர்களின் வளர்ச்சிக்காக" இன்று "லயன்ஸ் கழகத்தால்" இடம்பெற்ற கருத்தமர்வு..!!

உலக வங்கியின் நிதியத்தில் "லயன்ஸ் கழகத்தால்" இன்று 24.10.14 வெள்ளிக்கிழமை, புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய கேட்போர் கூட மண்டபத்தில், புங்குடுதீவில் உள்ள மீனவர்களின் வளர்ச்சிக்காக இடம்பெற்ற கருத்தமர்வில் மதகுருமார், ஊர்பெரியவர்கள், மற்றும் பயனாளிகள் உட்பட பொது மக்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

(படங்கள்) புங்குடுதீவில் "ஹரிதாஸ்" நிறுவனத்தின் உதவியில் அமைக்கப்பட்டு வரும், "மழைநீர் சேமிப்புத் தொட்டிகள்"..!

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர், புங்குடுதீவு சமூக பொருளாதார அபிவிருத்தி கூட்டுறவு சங்கம்,  ஹுதேக்  ஹரிதாஸ் (Hudec caritas)  நிறுவனத்திடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, "மழைநீர் சேமிப்புத் தொட்டிகள்" ஒன்பதை தமது செலவில் அமைத்து தர முன்வந்தது.

பின்னர் ஹுதேக்  ஹரிதாஸ் -Hudec caritas - நிறுவனம், கிராம சேவையாளர், பிரதேச சேவையாளர் பிரிவுகளுடன் இணைந்து "மழைநீர் சேமிப்புத் தொட்டிகள்" ஒன்பதையும் அமைக்கும் இடங்களை தெரிவு செய்து, தற்போது அதன் வேலைப்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

lundi 25 août 2014

மகாவித்தியாலயத்தின் சுற்றுமதில்

எமது ஒன்றிய  மத்தியகுழு உறுப்பினர் திரு கிருஸ்னபிள்ளை அவர்கள் புங்குடுதீவு சென்றபோது எமது ஒன்றியத்தினால் நிர்மானிக்கப்படும் மகாவித்தியாலயத்தின் சுற்றுமதில் கட்டுமானம் விடயமாக எடுத்துவந்த நிழல்படங்கள் .
சுற்றுமதில் ஆரம்பகட்டப் பணிகள் படங்கள்



vendredi 15 août 2014

அறிவித்தல் தென்னங்கீற்று 2014



  •  அறிவித்தல் தென்னங்கீற்று 2014

  • அன்பான பிரான்ஸ் வாழ் புங்குடுதீவு மக்கள் அறிவது, எமது ஒன்றியத்தின் வருடாந்த தென்னங்கீற்று நிகழ்வு வரும் 19-10-2014 அன்று நடைபெறவுள்ளது, இந்நிகழ்வில் நடைபெறும் கலைநிகழ்வுகளில் உங்கள் பிள்ளைகளும் பங்குபெறவிரும்பின் தயவு செய்து வரும் 30-09-2014 க்கு முன் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.


  • திரு மதிவதனன் (மதி) 06 03 37 38 24

  • திரு கோணேஸ்வரன் (கோணேஸ்) 06 66 89 39 93

  • திரு குகதாசன் 06 14 08 63 55


புங்குடுதீவு சமூகசேவையாளர்களுடன் இணையவழி கலந்துரையாடல்

இணைய வழிக்கலந்துரையாடல்

vendredi 4 juillet 2014

புதிய நிர்வாகத்தினர் 2014

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் 01/06/2014 ல் தெரிவுசெய்யப்பட்ட புதிய நிர்வாக உறுப்பினர்கள்.
புதியநிர்வாகத்தினர் 2014