lundi 24 février 2020

அறிவுத்திறன் போட்டி 2020

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் நடாத்தும் வருடாந்த அறிவுத்திறன் போட்டி இவ்வருடம் 18/04/2020 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. உங்கள் பிள்ளைகளையும் இப்போட்டியில் பங்குபற்றி பரிசில்களை வெல்லுங்கள்.
விண்ணப்பமுடிவு முடிவு திகதி 15/04/2020.

விண்ணப்பபடிவம் பெற கீழ்வரும் விண்ணப்பப்படிவத்தில் கிளிக் பண்ணவும்


திருக்குறள் போட்டிக்கான தலைப்புக்கள்
கீழ்வரும் அதிகாரங்களில் சொடுக்குவதன் மூலம் நீங்கள் உங்கள் குறள்களை பெற்றுக்கொள்ளலாம்

திருக்குறள்(பாலர்பிரிவ)                                                திருக்குறள் (கீழ்ப்பிரிவு)


அதிகாரம் 13 அடக்கவுடமை"                                 அதிகாரம் 78 "படைச்செருக்கு"

அதிகாரம் 14 "ஒழுக்கமுடைமை"                          அதிகாரம் 79 "நட்பு"

dimanche 16 février 2020

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றிய அறிவித்தல்

அன்புடையீர்,

பல கலைஞர்களின் வேண்டுகோளிற்கிணங்க பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  குறும் படப் போட்டியினை இவ்வாண்டில் திரும்பவும் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது. அந்தவகையில் கலைஞர்கள் இப்போட்டி சிறப்பாக நடைபெறுவதற்கு எமக்கு உதவிக்கரமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

இக்குறும்படப் போட்டி தெரிவு நிகழ்வு 25/10/2020 ல் நடைபெறும் எமது வருடாந்த தென்னங்கீற்று விழாவிற்கு முதற்கிழைமை நடைபெற்று தென்னங்கீற்று விழாவில் வெற்றி பெற்ற குறும்படங்கள்,குறும்படங்களின் தயாரிப்பாளர் நடிகர்களுக்கான பரிசில்கள் வழங்கப்படும். குறும்படப்போட்டி தெரிவுக்கான திகதி பின்னர் அறியத்தரப்படும்.

அத்துடன் எமது ஒன்றியத்தினால் நடாத்தப்படும் அறிவுத்திறன் போட்டியானது 18/04/2020 அன்று நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.