dimanche 16 février 2020

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றிய அறிவித்தல்

அன்புடையீர்,

பல கலைஞர்களின் வேண்டுகோளிற்கிணங்க பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  குறும் படப் போட்டியினை இவ்வாண்டில் திரும்பவும் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது. அந்தவகையில் கலைஞர்கள் இப்போட்டி சிறப்பாக நடைபெறுவதற்கு எமக்கு உதவிக்கரமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

இக்குறும்படப் போட்டி தெரிவு நிகழ்வு 25/10/2020 ல் நடைபெறும் எமது வருடாந்த தென்னங்கீற்று விழாவிற்கு முதற்கிழைமை நடைபெற்று தென்னங்கீற்று விழாவில் வெற்றி பெற்ற குறும்படங்கள்,குறும்படங்களின் தயாரிப்பாளர் நடிகர்களுக்கான பரிசில்கள் வழங்கப்படும். குறும்படப்போட்டி தெரிவுக்கான திகதி பின்னர் அறியத்தரப்படும்.

அத்துடன் எமது ஒன்றியத்தினால் நடாத்தப்படும் அறிவுத்திறன் போட்டியானது 18/04/2020 அன்று நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire