lundi 6 avril 2020

மனிதநேயப்பணியை வாழ்த்துகின்றோம்

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள்ஒன்றிய மத்தியகுழு உறுப்பினர் திரு தர்மலிங்கம் பாஸ்கரன் அவர்களும், ஒன்றிய உறுப்பினர் திரு சதாசிவம் வைகுந்தராசன் அவர்களும் அவர்களின் அன்புக்குரியவர்களின் நினைவாக புங்குடுதீவில் தற்போதைய கொடிய கொரோனா நோய்ப்பரவல் காரணமாக வீடுகளில் வாரக்கணக்கில் தங்கியிருக்கும் மக்களுக்கு பாரிய நிதியுதவியுடன், உள்ளுார் அமைப்புக்களுடன் சேர்ந்து அம்மக்களுக்கு தேவையான உணவுப் பொதிகளை வழங்கி வருகின்றார்கள்

இவர்களின் இம்மனித நேயப்பணியானது சரியான நேரத்தில் அங்கு வாழ்வியல் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு கிடைக்கச் செய்ததனையிட்டு அவர்களுக்கு எமது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன் அவர்களின் அன்புக்குரியவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.

நன்றி
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்.




Aucun commentaire:

Enregistrer un commentaire