lundi 4 septembre 2023

நீர் நிலைகளைப் பராமரித்தல்

 புங்குடுதீவு மக்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கு ஓர் அறிவிப்பு

புங்குடுதீவில் உள்ள குடிநீருக்கு உகந்த பொதுக் கிணறுகளை சுத்தம் செய்து பொது மக்களின்  குடிநீர் பாவனைக்கு விடும் செயற்பாடுகளை பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் செய்து வருகிறது. அதன் அடிப்படையில் முதலில் அங்கு வாழும் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க 9 நன்னீர்க்கிணறுகள் சுத்தம் செய்யப்பட்டு பொதுமக்களின் பாவனைக்கு விடப்பட்டுள்ளன.

(இதற்காக உதவி (வாட்டப்பம்)செய்த அமரர் திரு நா.இராசலிங்கம் அவர்களின் மகனுக்கு புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின்  

சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்)

 ஊரில் வசிக்கும் மக்களின் குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு அவசர நடவடிக்கையாக இது தற்போது நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் மக்கள் தமக்கருகில் தமது நன்னீர் தேவைக்கு பாவிக்க முடியாது கிடக்கும் கிணறுகளை எமக்கு அறியத்தந்தால் அவற்றையும் உடனடியாக எம்மால் முடிந்தளவு சிறப்பாக சுத்தம் செய்து உங்கள் பாவனைக்கு விட முடியும். இதற்கான முழுச் செலவையும் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பொறுப்பேற்கும். உங்களுக்கு தெரிந்த பொது கிணறு குடிநீர் அல்லது குளிக்கிற கிணறு தூர் வாரும் பணியை செய்து கொள்ள நீங்கள் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் 0772669902  MR தம்பா. 

 நன்றி

நிர்வாகம்

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்.


vendredi 26 mai 2023

திறன் வகுப்பு உபகரணங்கள் உதவி


புங்குடுதீவு கமலாம்பிகை மகாவித்தியாலயத்திற்கான திறன்வகுப்பு ஒன்றினை அப்பாடசாலையின் வேண்டுகோளுக்கிணங்க பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினர் அமைத்துக் கொடுத்துள்ளனர்.

இதன் போது ஒன்றியம் திறன்வகுப்புக்கான வகுப்பறையினை புனரமைத்து முற்றுமுழுதாக அதனுள் மழைகாலத்தில் தூவானம் உள்செல்ல முடியாதவாறு அதன் கட்டமைப்பினை முற்றாக வலயக்கல்வி உத்தியோகத்தினரின் அறிவுரைக்கமைய புனரமைத்து அதற்கான திறன்வகுப்பு உபகரணங்களும் கொடுத்து உதவியுள்ளனர்.

 👉👉பாடசாலை அதிபரின் நன்றிக்கடிதம்

வகுப்பறையின் முன்னைய நிலையும் புனரமைப்பின் பின் உள்ள நிலையும் படங்களில்


 

 திறன் உபகரணங்களுடன் வகுப்பறை



 

 

 

 




 

 

அத்துடன் பாடசாலையின் மழைநீர் சேகரிப்பு பீலிகளும் அதன் தாங்கு பலகையும் சிதைவடைந்து உடைந்திருந்ததினால் அதனையும் புதிதாக அமைத்துக் கொடுத்திருந்தோம்.




 

 

 

 

 

 



 

 

 

 

 

 

 

 

 

 

 

இதற்காக புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் 1.4மில்லியன் ரூபாவினைச் செலவிட்டிருந்தது. இதனைச் செயற்பட உதவிய ஒன்றிய உறுப்பினர்கள் அனைவருக்கும், இதற்கான பணத்தினை எங்களின் வேண்டுகோளிற் கிணங்க பகுதி பகுதியாகக் கொடுத்துதவிய சர்வோதய நிர்வாகத்தினருக்கும், இவ் வேலைகளினை மேற்பார்வை செய்து செயற்படுத்திய பாடசாலை அதிபர் திரு கிருபாகரன் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்.

தகவல்

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்

lundi 15 mai 2023

அறிவுத்திறன் பாேட்டி 2023 முடிவுகள்

 எமது ஒன்றியத்தினால் 01/05/2023 அன்று நடத்தப்பட்ட அறிவுத்திறன் பாேட்டியில் பங்குபற்றி பரிசில்களைப்  பெறும் மாணவர்களின் விபரங்கள் அறிவதற்கு கீழ்க்காணும் இணைப்பில் அழுத்தவும்.

👉👉👉அறிவுத்திறன் 2023ல் பரிசில்களைப் பெறுவாேர் விபரம்

இவர்களுக்கான பரிசில்கள் தென்னங்கீற்று 2023ல் வழங்கிக் கெளரவிக்கப்படும்

vendredi 17 mars 2023

அறிவுத்திறன் பாேட்டி 2023

பிரான்ஸ்  புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் வருடம் தாேறும் நடத்தும் அறிவுத்திறன் பாேட்டி நிகழ்வுகள் இவ்வருடம் 01/05/2023 திங்கள் கிழமை பாரிஸ் சாேதியா கலைக்கல்லூரியில் நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றாேம். இதில் பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் வரும் 27/04/2023ற்கு முன்னர் கீழ்வரும் இணைப்பில் காணப்படும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் காணப்படும் வினாக்களைப் பூர்த்தி செய்து அனுப்பி வைக்கும்படி வேண்டிக்காெள்கின்றாேம்.

 

விண்ணப்ப படிவத்தினைப் பெற்றுக்காெள்ள கீழ்காணும் இணைப்பில் அழுத்தவும்

>>>>>>>>>>>>>>>>விண்ணப்ப படிவம்<<<<<<<<<<<<<<<

mercredi 15 mars 2023

புதியநிர்வாகம் 2023/2025

 பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தேர்வும் 26/02/2023 அன்று சோதியா கலைக்கல்லூரியில்  நடைபெற்று 2023/2025 க்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். கூட்டத்தின் ஆரம்பத்தில் முன்னைய நிர்வாகத்தினர் தங்களின் 2018-2022 காலப்பகுதியில் தாங்கள் ஆற்றிய செயற்பாடுகளை எடுத்துரைத்து தங்கள் கடந்த கால நிகழ்வு அறிக்கைகளைச் சமர்ப்பித்தனர். தங்களின் காலத்தில் கோவிட் தாக்கத்தினால் 2020/2021 காலப்பகுதியில் எதுவித ஒன்றுகூடல்கள் விழாக்களை நடத்த முடியாதிருந்ததனையும் எடுத்துரைத்தனர்.

அதனைத் தொடர்ந்து தேநீர்  இடைவேளைக்குப்பின் புதிய நிர்வாகத் தேர்வு நடைபெற்றது. அதில் தெரிவு செய்யப்பட்ட  புதிய உறுப்பினர்களை பின்வரும் இணைப்பில் பார்வையிடலாம்.

புதிய நிர்வாக உறுப்பினர்கள்

தொடர்ந்து புதிய உறுப்பினர்களின் அறிமுக உரையும், தொடர்ந்து நன்றியுரையுடன்  கூட்டம் இனிதே முடிவுற்றது.

நிழல் படங்கள்






 

samedi 4 février 2023

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றிய பொதுக்கூட்டம்

 அன்புடையீர் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தேர்வும் வரும் 26/02/2023 அன்று ஞாயிறு மாலை 4 மணிக்கு பாரிஸ் லாச்சப்பலில் உள்ள சோதியா கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம். பிரான்ஸ் வாழ் புங்குடுதீவு மக்களின் அதிகளவு வரவினை எதிர்பார்க்கின்றோம்.  விபரங்களை கீழ்வரும் இணைப்பில் பார்க்கவும்.

நன்றி, நிர்வாகம்.