Projects Pungudutivu

2022

புங்குடுதீவு கமலாம்பிகைக்கான திறன்வகுப்பு உபகரணங்கள்

👉👉👉பார்வையிடுவதற்கு இங்கு அழுத்தவும் 


2021 
பாடசாலைக்கான நிழல் பிரதி இயந்திர உதவி

புங்குடுதீவு சுப்ரமணிய மகளிர் வித்தியாலயத்திற்கு அதன் அதிபர் திருமதி V. Arudselvan ,அவர்கள் தஙகள் பாடசாலைக்கு ஓர் நிழல் பிரதி இயந்திரம் ஒன்று தேவையாக உள்ளதாக சமூகவலையத்தளத்தினூடாக அறிவித்திருந்தார். அவரின் வேண்டுதலினை ஏற்று பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் ரூபா 170000மதிப்புடைய ஓர் நிழல் பிரதி இயந்திரம் ஒன்றினை வழங்கியிருந்தனர்.

👉👉👉தாெடர்புடைய பிரசுரங்கள்

 2020

1. மகாவித்தியாலய GCE O/L மாணவர்களுக்கான மதிய உணவு 

புங்குடுதீவு மகாவித்தியாலய படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் காேவிட் தாக்கத்தினால் பலவகுப்புக்கள் நடத்தப்படவில்லை இதனால் அவர்களுக்கு பிரத்தியாேக வகுப்புக்ள் எடுப்பதற்காக 31 மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி உதவுமாறு அதிபர் செல்வி சுபந்தினி அவர்களின் வேண்டு காேளினை ஏற்று அவர்களுக்கு அவர்களின் பரீட்சை வரையுள்ள காலமான 2020 மார்கழி, 2021 தை,2021 மாசி ஆகிய 3 மாதங்களுக்கு பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் மதிய உணவு வழங்கப்பட்டது.

👉👉👉 தாெடர்புடைய பிரசுரங்கள்

 

2. புங்குடுதீவு மகாவித்தியாலய சுற்றுமதிலுக்கான திருத்த வேலைகளும் வர்ணம் பூசுதலும்

புங்குடுதீவு மகா வித்தியாலயத்தின் 75ஆவது நிறைவை முன்னிட்டு  2015ம் ஆண்டு பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் 6.66 மில்லியன் ரூபா செலவில் புங்/மகாவித்தியாலயத்திற்கு பாடசாலையையும் மைதானத்தையும் இணைத்து  நிர்மானிக்கப்பட்ட 620மீட்டர் நீளமும் 1.8மீட்டர் உயரமுமான சுற்றுமதிலுக்கு திருத்த வேலைகளும் வர்ணம் பூசுதலும் தேவைப்படுவதாக பாடசாலை பவளவிழாக் குழுவினரூடாக  பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலனை செய்த ஒன்றிய நிர்வாகம் கொரோனா காலப் பகுதி என்றாலும் கூட இணைய வழியில் ஒன்று கூடி உடனடியாக அதனை செய்து கொடுப்பது என்று முடிவெடுத்து அதற்காக எமக்கு கிடைத்த 3 மதிப்பீடுகளில் மற்றும் விலை என்பனவற்றை கவனத்தில் எடுத்து அதன் மதிப்பீடான 7.35 லட்சம் ரூபாய்களை ஒன்றியம் ஏற்று அதனைச் செயற்படுத்திக் கொண்டுள்ளது. இதற்கான கொடுப்பனவுகளை சர்வோதய நிர்வாகத்தின. உதவியுடன் முன்னெடுக்கின்றோம்.

இந்த கொரோனா காலப் பகுதியிலும் முடிவை எடுக்க உதவிய நிர்வாக உறுப்பினர்களுக்கும் மற்றும் அங்கத்துவ பணத்தை தந்துதவிய உறவுகளுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்

 

3. வெள்ளநிவாரண உதவி

2020ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பினால் பாதிக்கப் பட்ட மக்களுக்காக பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் புங்குடுதீவு நலன்புரிச்சங்க வேண்டுகாேழுக்கு இணங்க 500 நுளம்பு வலைக்காக ரூபா 262000ரூபாவினை நலன்புரிச்சங்கத்தினூடாக வழங்கியிருதாேம்

👉👉👉தாெடர்புடைய பிரசுரங்கள்

2019

1. மகாவித்தியாலயம் நீர்த்தேவையினக் கருத்திற்காெண்டு பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளாேம் அதனை கீழ் வரும் இணைப்பில் அழுத்துவதன் மூலம் அறியலாம்

👉👉👉மகாவித்தியாலய நன்னீர்த்திட்டம் 

👉👉👉1வருடத்தின் பின் அதிபரின் கருத்து 

2 . 2018 ஆண்டு பருவமழையினால் வடமாகாணத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கான  நிவாரண உதவி IBC யினூடாக

👉👉👉வெள்ளநிவாரணம் வடமாகானம்

 3. தாெழில் முயற்சியினை ஊக்கிவிப்பதற்கான உதவி

புங்குடுதீவு 12 வட்டாரத்தினைச் சேர்ந்த திரு தனபாலன் சுலாேசனாம்பிகை அவர்கள்  அட்சயபாத்திர அன்னையர் கழகம் என்னும் பெயரில் பாடசாலைகளுக்கு உணவுதயாரித்து வழங்கிவந்தார். அவர் தங்களுக்கு ஓர் பசுமாடு வாங்குவதற்கு வட்டியில்லாத கடனாக ரூபா இரண்டு லட்சம் உதவி செய்யுமாறு  ஒன்றியத்திடம் காேரினார்.

இதனை பரிசீலித்த ஒன்றியம் அவரின்தாெழில் முயற்சியினை ஊக்கிவிப்பதற்கா ரூபா இரண்டு இலட்சம் கடனாக வழங்கியிருந்தனர். 

👉👉👉தாெடர்புடைய பிரசுரம் 

2018

இயற்கைப் பசளை உற்பத்தி தொழிற்சாலை  composit fertilizer


புங்குடுதீவில் கிடைக்கும் இயற்கை எரு, மற்றும் இயற்கையாக உக்கக் கூடிய சேதன பொருட்களைக் கொண்டு ஓர் கூட்டுப் பசளை தயாரிக்கும் திட்டத்தினை எமது ஒன்றியத்தில் நீண்டகால உறுப்பினரும் தற்போது புங்குடுதீவில் ஓர் விவசாய கூட்டுப்பண்ணையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமாக இருக்கும் திரு சின்னத்தம்பி குமாரதாஸ் அவர்களின் மேற்பார்வையின் கீழ் பிரான்ஸ் புங்குடுதீவ மக்கள் ஒன்றியத்தினால் நிதியுதவி வழங்கப்பட்டு செயற்படுத்தப்படுகின்றது.

இதற்கு ஆரம்ப நிதியாக ரூபா பத்து லட்சம் அளிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய நிழல் படங்கள்: Picture about compost fertilizer


2016
புங்குடுதீவு வாணர்அரங்கு புனரமைப்புக்கான உதவி. 


   வாணர் அவர்களின் நினைவாக புனரமைக்கப்படும் அரங்கு பற்றி வாத பிரதிவாதங்கள் இருந்தபோதும் அவருக்கு மதிப்பளித்தல் மற்றும் அவரை நினைவு கூரல் என்பதில் எமது ஊர் மக்களிடையே எந்த மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது. அதன்படி வாணர் அரங்க அமைப்பாளர்களின் வேண்டுகோளை ஏற்று பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் இரண்டு மில்லியன் ரூபா (2,000,000ரூபா) உதவியளிப்பதாக ஒன்றியத்தினால் உறுதியளிக்கப்பட்டு அதனை நாம் செலுத்தியிருந்தோம் இந்நிதியினை நாம் எமது ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய நலன்விரும்பியோரிடமும் இருந்து சேகரித்து இருந்தோம். அவர்களின் விபரம் பின் வருகின்றதது 



·         புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணியம் மகளீர் வித்தியாலய மாணவர்களுக்கான சீருடைகள்
வித்தியாலய அதிபர் அவர்களால் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அப்பாடசாலைக்கு எமது ஒன்றிய ஆதரவில் இயங்கும் ஆடைத் தொழிற்சாலையின் பணிப்பாளர் நேரடியாகச்சென்று மதிப்பிடப்பட்ட மூன்று லட்சத்தி அறுபதாறாயிரத்தி ஐநூறு ரூபா (366,500,00) க்களுக்கான மதிப்பீடு ஏற்றுக்கொள்ளப்பட்டு அதனை எமது ஆதரவில் இயங்கும் தையலகத்தினூடாக செயற்படுத்தினோம் இதனால்அதில் பணிபுரியும் மக்கள் நலமடைவதற்கு உதவியதுடன் பாடசாலைக்கும் ஓர் உற்சாகித்தினை ஏற்படுத்தினோம்
இவ் உதவியானது 16/02/2016 அன்று எமது ஒன்றிய மத்தியகுழு உறுப்பினர் ஆசிரியர் திரு சங்கரராசா அவர்களின் முன்னிலையில் செக்டா பணிப்பாளரினால் சுப்ரமணிய வித்தியாலய ஆசிரியர்களிடம் கையளிக்கப்பட்டது
கையளிப்பு படங்களைப் பார்வையிட கீழ்வரும் link ல் அழுத்தவும்:
 
👉👉👉தொடர்புடைய நிழல் படங்கள்நிழல் படங்களை பார்வையிட

·         புங்குடுதீவு மகாவித்தியாலய சுற்றுமதில்

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் யா/புங்குடுதீவு மகாவித்தியாலயத்துக்கு அமைத்து கொடுக்கப்பட்ட மதிலின் இறுதி வேலைகள் வித்தியாமற்றும் அதிபரின் இழப்புக்களால் பின் தங்கியதாலும் சில அதிக வேலைகள் காரணமாகவும் தனக்கு இழப்பு ஏற்பட்டதாக கட்டிட ஒப்பந்தக்காரரால் சமர்ப்பிக்கப்பட்ட மனு அவரது மேலதிக செலவுகளின் தரவு  அடிப்படையிலும், கருணை அடிப்படையிலும் மீளாய்வு செய்யப்பட்டு மேலும் ஐந்து லட்சத்து முப்பத்தியிரண்டாயிரம் ரூபாக்கள் (500.000,00ருபா) வழங்கியிருந்தோம். எல்லாமாக இச்சுற்று மதிலுக்கு 6.6 மில்லியன் ரூபாக்கள் செலவாகியுள்ளது இம்மதிலை பாதுகாப்பது அங்குள்ள ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பொது மக்களின் கடமையாகும். இதன் பராமரிப்பே எம்மை மேலும் மேலும் மக்களுக்காக செயலாற்றவும் மக்களின் ஆதரவைப் பெற்று மேலும் மேலும் பெரும் திட்டங்களை செய்யவும் உற்சாகப்படுத்தும்.



2015

புங்குடுதீவு மகாவித்தியாலய தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறப்பு விழாவிற்கான நிதியுதவி


புங்குடுதீவு மகாவித்தியாலய தொழில் நுட்ப ஆய்வுகூட திறப்புவிழாவின் நடத்துவதற்கு நிதியுதவிஇல்லாது அதன் திறப்புவிழா அங்கீகாரம் பின்செல்வதனை அறிந்து எமது ஓன்றியம் அதன் திறப்புவிழாவிற்காக ரூபா ஐம்பதினாயிரம் (50,000)  நிதியுதவி வழங்கியிருந்தோம்


புங்குடுதீவு மகாவித்தியாலய சுற்றுமதில்
  • எமது ஒன்றியத்தினால்  அமைத்துக்கொடுக்கப்பட்ட விளையாட்டு மைதானம் உட்பட்ட சுற்றுமதில் ஆனது 21/04/2015 அன்று பாடசாலைச் சமூகத்திடம் கையளிக்கப்பட்டது அதன்போது புங்குடுதீவு வாழ் கல்வியாளர்கள் அறிஞர்கள், சமூகநலன்விரும்பிகள் என அதிகளவு மக்கள் இத்திறப்புவிழாவில் கலந்து சிறப்பித்தனர். பிரான்சில் இருந்து ஒன்றியச் செயலாளர் திரு சுப்பையா சஸ்பாநிதி, முன்னாள் கொழும்பு வர்த்தகர் திரு சுப்பிரமணியம் கோபாலபிள்ளை, திரு தமிழ்மாறன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
  • இச்சுற்றுமதிலினை அமைத்துக் கொடுப்பதற்கு பிரான்ஸ் வாழ் புங்குடுதீவுமக்கள் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினூடாக இதுவரை ரூபா அறுபது லட்சத்தி அறுபத்தி இரண்டாயிரம் ரூபா (6062000ருபா) வழங்கியுள்ளனர். 
  • மேலும் சில மேலதிக வேலை இருப்பதால் மொத்த செலவு தொகை பின்னர் விபரமாக அறிவிக்கப்படும் 
  • சுற்றுமதில் கையளிப்பு நிழல் படங்கள் <<<<<< clic on to find the detail

முன்பள்ளிகளுக்கான உதவிகள்
  • 2015ம் ஆண்டு நாம் தொடர்ந்து 10முன்பள்ளிகளின் 12 ஆசிரியர்களுக்கும் நிர்வாகச்செலவிற்குமாக  ரூபா ஐந்து லட்சத்தி இருபத்தி நான்காயிரம் (524000) புங்குடுதீவு வடஇலங்கைச் சர்வோதயத்தினூடாக கொடுத்து செயற்படுத்தி இருந்தோம். அதன் விபரத்தினை அதன் கீழ் வரும் இணைப்பில் கிளிக் செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். 
  • இவ்முன்முள்ளி ஆசிரியர்களுக்கு பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் 2009ம் ஆண்டில் இருந்து உதவி வருகின்றது தற்போத இவ் முன்பள்ளிகளில் கற்பித்து வரும் ஆசிரியர்களுக்கு வேலனைப்பிரதேச கல்வித்திணைக்கழகத்தினால் அவர்களுக்கு சம்பளம் வழங்குவதால் நாம் 2015 மார்கழியில் இருந்து எமது கொடுப்பனவுகளை நிறுத்த கின்றோம். 2009ம் ஆண்டில் இருந்து 2015 உட்பட எமது ஒன்றியம் ரூபாநாற்பத்தி ஒரு இலட்சத்தி எண்பத்தி எட்டாயிரம் உதவியுள்ளோம். (4,188,000ரூபா)
  • முன்பள்ளிக் கொடுப்பனவு 2008-2015  <<<<<< clic on to find the detail
  • முன்பள்ளிகள்

2014

  • இவ்வருடம் தொடர்ந்து முன்பள்ளிகளுக்கான உதவி எமது ஒன்றியத்தினால் வழங்கப்படுகின்றது. 10 முன்பள்ளிகள் எமது ஒன்றியத்தின் நிதியுதவியுடன் நடைபெறுகின்றது. இவ் 10 முன்பள்ளிகளிலும் 13ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர் அதன் விபரத்தினை நீங்கள் கீழே காணலாம். இதற்காக எமது ஒன்றியம் இலங்கை ரூபாவில் 516000 வழங்கியுள்ளோம்       மேலும் விபரங்கள் அறிவதற்கு                                                                                                                                               

  • தொடர்ந்து 2வது மிகப்பெரிய திட்டமாக புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு அதன் விளையாட்டு மைதானம் உள்ளடங்கலாக சுற்றுமதில் அமைத்துக்கொடுப்பதற்கு எமது ஒன்றியம் முடிவெடுத்து அதனை செயற்படுத்திக் கொண்டுள்ளது. இதற்கான திட்டமதிப்பீடு இலங்கை ரூபாவில் 5600000ஆகும். (ஐம்பத்தியாறு லட்சம்). இதனைச் செயற்படுத்துவதின் மூலம் எமது பாடசாலையின் தரம் உயர்வதுடன் எமது பிள்ளைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்துவதுடன் பிள்ளைகளின் கற்றல் கற்பித்தல் மற்றும் இணைபாட செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும் என எண்ணுகின்றோம்.
  • தொடர்புடைய பிரசுரம்

2013 


  • போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுமுகமாக கிளிநொச்சி  மகாதேவா சிறுவர் இல்லத்திற்கு அவர்களின் 1வருட மின்சாரத்தேவையின் ஒருபகுதியாக ரூபா 500000 வழங்கியிருந்தோம்.


2012

தொடர்ந்து இவ்வருடமும் 12 முன்பள்ளிகளுக்குமான நிர்வாகச்செலவு, 15ஆசிரியர்களுக்கான வேதனமும், மற்றும்  222 சிறார்களுக்கான மதியஉணவுக்குமாக இலங்கை நாணயத்தில் ரூபா 804000 சர்வோதயத்தினூடக வழ‌ங்கப்பட்டது. 
பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் உதவியுடன் நடத்தப்படும் முன்பள்ளி விபரம் அறிய இங்கே அழுத்தவும்        
                                          munpalli 2012 teacher
—————————————————————————————————
2011ம் ஆண்டு புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் வன்னி மக்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள்

படங்களில் பார்க்க‌ஒன்றியத்தின் உதவிகள் வன்னியில் 2011
2011
பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் ச‌ர்வோதயத்தின் மேற்பார்வையுடன் நடத்தப்படும் 2011ஆம் ஆண்டிற்கான‌  திட்டங்கள்.புங்குடுதீவில் 11 முன்பள்ளிகளுக்கான நிர்வாகச் செலவினையும், அதில் கல்வி கற்பிக்கும் 14 ஆசிரியர்களுக்குமான வேதனத்தினையும்,  கல்விபயிலும் மாணவர்களுக்கு மதிய உணவினையும்வழ‌ங்கி வருகின்றது. இதற்கான நிதியாக 2011ஆண்டில் இலங்கை நாணயத்தில் ரூபா ஏழு லட்சம் தனது 2010 நிதியாண்டில் ஒதுக்கியுள்ளது. எமது ஒன்றியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் முன்பள்ளிகளின் விபரம்.
  1. தொண்டர் திருநாவுக்கரசு முன்பள்ளி  புங்குடுதீவு 3 மாணவர் எண்ணிக்கை 60 ஆசிரியர் 3.
  2. சிவலைப்பிட்டி முன்பள்ளி புங்குடுதீவு 4 மாணவர் எண்ணிக்கை 19 ஆசிரியர் 3
  3. இறுப்பிட்டி முன்பள்ளி புங்குடுதீவு 4 மாணவர் எண்ணிக்கை 10 ஆசிரியர் 1
  4. ஐங்கரன் முன்பள்ளி புங்குடுதீவு 6 மாணவர் எண்ணிக்கை 10 ஆசிரியர் 1
  5. கலைவாணி  முன்பள்ளி புங்குடுதீவு 5 மாணவர் எண்ணிக்கை 8 ஆசிரியர் 1
  6. நசரேத் முன்பள்ளி புங்குடுதீவு 12 மாணவர் எண்ணிக்கை 15 ஆசிரியர் 1
  7. மாதர்சங்கமுன்பள்ளி புங்குடுதீவு 10 மாணவர் எண்ணிக்கை 23 ஆசிரியர் 1
  8. சர்வமதசங்க முன்பள்ளி புங்குடுதீவு 9 மாணவர் எண்ணிக்கை 20 ஆசிரியர் 2
  9. பாரதி முன்பள்ளி புங்குடுதீவு 11 மாணவர் எண்ணிக்கை 26 ஆசிரியர் 1
  10. காந்திமுன்பள்ளி புங்குடுதீவு 04 மாணவர் எண்ணிக்கை 16 ஆசிரியர் 1
  11. மடத்துவளி முன்பள்ளி புங்குடுதீவு 7 மாணவர் எண்ணிக்கை 12 ஆசிரியர் 1
முன்பள்ளிகளின் எண்ணிக்கை 11 ஆசிரியர்கள் 14 மாண‌வர்களின் எண்ணிக்கை 219.

Aucun commentaire:

Enregistrer un commentaire